திருப்பரங்குன்றத்தில் வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி கைபார நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2015 10:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவின் 5வது நாளான நேற்று கைபார நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவையொட்டி தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருள்கிறார். நேற்றிரவு வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையை சீர்பாதங்கள், கிராமத்தினர் உள்ளங்கைகளில் தலைக்கு மீது துாக்கிச் கொண்டு கொத்தாள முக்கு முதல் கோயில் வாசல்வரை ஓடினர். பின், பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது.திருக்கல்யாணம்: முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 31ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, ஏப்., 3ல் உத்திரம், 5ல் பட்டாபிஷேகம், 6ல் திருக்கல்யாணம், 7ல் தேரோட்டம், 8ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது.