திருவாரூர்: திருவாரூர் அருகே சேந்தமங்லகத்தில் வாரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ தெஷிணா காளிக்கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தினசரி அபிஷேகங்கள் தொடர்ந்து நடந்து வந்தது. இன்று காலை நடந்த மண்டலாபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இருந்து மூன்று கி.மீ., தொலைவில் மயிலாடுதுறை சாலையில், சேந்தமங்கலத்தில் அகில, உலகையும் படைத்து, காத்து அருள்பாலிக்கும் அன்னை பராசக்தி அடியார்களுக்கு அருள்பாலித்து, கருணை வடிவாக கொண்டு, ஸ்ரீதெஷிணாகாளி அம்மன் எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் கடந்த பிப்ரவரிமாதம் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் தினசரி பல்வேறு பூஜைகள் நடந்து வந்தது. இன்று காலை 9.00 மணிக்கு கண பதி ஹோமங்களுடன், யாக வேள்வி பூஜைகள் துவங்கியது. காலை 10.30 மணிக்கு ரிஷப லக்னத்தில், மண்டல அபிஷேக நிறைவு மகா பூர்ணாஹூதி நடை பெற்று மகா தீபாரதனையுடன் தட்சிணகாளிக்கு அனைத்து வகையான அபிஷேக ஆராதனைகள் நடை பெற்று யாக பூஜையில் வைத்த கடம் எடுத்து வரப்பட்டு மகா அபிஷேகம் நடந்தது.பின்னர் சுவாமி மற்றும் பரிகார தெய் வங்களுக்கு மகா தீபாரதனையை முத்துக்குமார சிவாச்சாரியர் காண்பித்தார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு விபூதி, குங்கும பிரசாதங்களுடன், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் சரோஜா தலைமையிலானகுழு வினர்கள் செய்திருந்தனர்.