திருப்பதி: திருமலையில் கோடிக்கணக்கான புனித தீர்த்தங்கள் இருந்தாலும் புஷ்கரணி தீர்த்தம், ராமகிருஷ்ணா தீர்த்தம்,கோபர்கா தீர்த்தம், ஆகாசகங்கை தீர்த்தம், சக்கஸ்நான தீர்த்தம் மற்றும் தும்முரு தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தங்கள் விசேஷமாக கருதப்படுகின்றன. இதில் தும்முரு தீர்த்தம் என்பது திருமலையில் இருந்து 16 கி.மீட்டர் அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கிறது.இங்கு தும்முரு என்ற தேவரிஷியின் சிலை உள்ளது. வருடத்தில் ஒரு நாள் உத்தர பங்குனி தினத்தன்று இங்க நீராடுவது பெரும் பயனைத்தரும் என்பதால் அந்த நாளில் பக்தர்கள் இங்கு நீராட வருவார்கள். இந்த வருடம் ஏப்ரல் 3 ந்தேதி அந்த விசேஷ நாள் வருகிறது. பக்தர்கள் அந்த நாளில் நீராட இப்போது முதலே தயராகி வருகின்றனர்.