பதிவு செய்த நாள்
02
ஏப்
2015
11:04
மயிலாப்பூர்: மயிலை கபாலீஸ்வரர் கோவிலில், நேற்று தேரோட்டம், கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேர் வடம் பிடித்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று காலை 6:30 மணிக்கு, கபாலீஸ்வரர், தேரில் எழுந்தருளினார். பின், பல்லாண்டு பாடல்களை, ஓதுவார் சத்குருநாதன் பாடினார். அதன்பின், சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. காலை 7:15 மணிக்கு, விநாயகர் தேர் முதலில் புறப்பட, அதையடுத்து, கபாலீஸ்வரர் தேர், வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நான்கு மாட வீதிகளையும், வலம் வந்த தேர், காலை 11:45 மணிக்கு, நிலைக்கு வந்தது. தேரோட்டத்தின் போது, பக்தர்கள் நான்கு மாடவீதிகளிலும், ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.