பதிவு செய்த நாள்
02
ஏப்
2015
12:04
விருத்தாசலம்: பிரதோஷத்தையொட்டி, விருத்தகிரீஸ்வரர், பிரளயகாலேஸ்வரர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, விரு த்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் போன்ற 12 சிறப்பு பொரு ட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலைகள் சாற்றி, மகா தீபாராதனை நடந்தது. அதேப்போன்று, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் ÷ காவிலில் நேற்று மாலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.