ஏழைகளின் வறுமையைச் சுட்டிக்காட்டி அவர்களை அவமானமாகப் பேசக் கூடாது. இதை மீறினால் என்னாகும் என்கிறார் நபிகள் நாயகம்.மார்க்கநெறிகளைப் பின்பற்றும் ஆணோ, பெண்ணோ ஏழைகளாக இருக்கிறார்கள் என்பதற்காக, அவர்களை ஏளனமாகவும், கேவலமாகவும் எவர் நினைப்பார்களோ, அல்லது அவர்கள் மீது வீண்பழி சுமத்துவார்களோ அல்லது இல்லாத குறைகளை அவர்கள் மீது சுமத்துவார்களோ அத்தகையோரை மறுமை நாளில் அல்லாஹ் நெருப்பு மேடையில் நிறுத்தி தண்டனை கொடுப்பான். என எச்சரிக்கை விடுக்கிறார்.ஏழைகளை மதிக்க வேண்டியதன் அவசியம் புரிகிறதா!