சபரிமலை: கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் சித்திரை விஷூ உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சித்திரை விஷூ தினத்தை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலில் அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் கனி தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி ஆகியோர் பக்தர்களுக்கு நாணயங்களை கைநீட்டமாக வழங்கினர். விஷூ தினத்தையொட்டி காலை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 18ம் படியேறவும், தரிசனத்துக்கும் நீண்ட வரிசை காணப்பட்டது. இதுபோல குருவாயூர் கோயிலிலும் கனி காணும் நிகழ்ச்சியும், விஷூ பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றது.