பண்ருட்டி திரவுபதிஅம்மன் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 7ம் தேதிமுதல் உற்சவம் துவங்கி நடந்து வருகிறது. கடந்த 14ம் தேதிஅரவாண்கடபலியும், வெள்ளை யானை புறப்பாடும், 15ம்தேதி கர்ணமோட்சம் உற்சவத்தை முன்னிட்டு மாலை 6:00 மணிக்கு பெருமாள்கருட வாகனத்தில் வீதியுலாவும் நடந்தது.
நேற்று (16ம் தேதி) மாலை 5:00 மணிக்கு சக்கரவர்த்தி கோட்டை உற்சவம், இன்று (17ம் தேதி) மாலை 5:00 மணிக்கு தீமிதி திருவிழாவும், வரும் 18ம் தேதி மஞ்சள்நீர் பட்டாபிஷேகம், 24ம் தேதி நிறைமணிஉற்சவமும் நடக்கிறது.