திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் 45 டன் கல்லில் பிரமாண்ட யாழிகள் ரூ. 20 கோடியில் பணி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2015 12:04
திண்டுக்கல்: அபிராமியம்மன் கோயிலில் ரூ. 20 கோடியில் திருப்பணிகள் நடக்கிறது. இதில் 45 டன் எடை கொண்ட 4 கல்லில் யாழிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமியம்மன் கோயில் இருந்தது. திப்பு சுல்தான் காலத்தில் அபிராமியம்மன் நகரின் மையப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிதிலமடைந்த மிக பழைமையான கோயில் இடிக்கப்பட்டு, அதே இடத்தில் ரூ. 20 கோடியில் புதிய கோயில் கட்டப்பட்டு வருகிறது. திருப்பணிக்குழு தலைவராக வேலுச்சாமி கவுண்டர் உள்ளார்.
45 டன் கல்லில் யாழிகள்: இக்கோயிலில் யாழிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக நாகர்கோவில் அருகேயுள்ள மயிலாடியில் இருந்து 45 டன் எடை கொண்ட 4 கற்கள் திண்டுக்கல்லுக்கு கொண்டு வரப்பப்டன. சிற்பிகள் மூலம் மிக பிரமாண்டமான யாழிகள் உருவாக்கப்படுகின்றன. இப்பணியில் 50 சிற்பிகள் பணியாற்றி வருகின்றனர்.
இயற்கை அழகுடன் சுவாமி சிற்பங்கள் பொறித்த 48 சித்திரை மண்டல கல்தூண்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் 5 ஆயிரம் கிலோ எடை கொண்டது. மேலும் கலை வேலைப்பாடுகளுடன்கூடிய அணில் வெட்டி தூண்கள் 8ம் செதுக்கப்பட்டுள்ளது.