ஆதிமூலேஸ்வரர் கோவிலில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2015 10:04
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே அமிர்தவல்லி சமேத ஆதிமூலேஸ்வரர் கோவிலில் நேற்று சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி முழுமையாக விழும் அதிசய நிகழ்வு நடந்தது. பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க அமிர்தவல்லி சமேத ஆதிமூலேஸ்வரர் ÷ காவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை சிவலிங்கத்தின் மீதும், அம்பாளின் பாதத்தின் மீதும் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடந்து வருகிறது. இந்தாண்டு இந்த சிறப்பு நிகழ்வையொட்டி அமிர்தவல்லி சமேத ஆதிமூலேஸ்வருக்கு சிறப்பு அபி ஷேகம் நடந்தது. கடந்த மூன்று நாட்களாக பனி மூட்டமாக இருந்ததால் சூரிய ஓளி லேசாகப்பட்டு வந்தது. நேற்று காலை 6:10 மணிக்கு சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது முழுமையாக பட்டது. அப்போது சிவலிங்கம் பிரகாசமாக காட்சியளித்தது. சுமார் 5 நிமிடங்கள் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது இருந்தது. தொடர்ந்து அம்பாளின் பாதத்தில் 6:17 மணிக்கு சூரிய ஒளிப்பட்டது. சில நிமிடங்கள் சூரிய ஒளி இருந்தது. இந்த அதிசய நிகழ்வை காண அகரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். பூஜைகளை சபாபதி குருக்கள், உத்திரகிரி குருக்கள் செய்தி ருந்தனர்.