விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி, பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு சிறப்பு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்து, நந்தீஸ்வருக்கு அருகம்புல் மாலையிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொரவியில் கரும்பு தோட்டத்தில் வீற்றிருக்கும் குரு தட்சிணாமூர்த்தி, ஆகாய லிங்கேஸ்வரருக்கு பால், தயிர் , இளநீர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் நடந்தது. பூஜைகளை, புதுச்சேரி சிவநேய செல்வர் சரவணன் செய்தார். சிவனடியார் கல்யாணி அம்மாள் தலைமையில் சிவனடியார்கள் திருவாசகம் படித்தனர். தொரவி மற்றும் சுற்றுப்புற கிராம ங்களிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சங்கர் மற்றும் முக்கிய ஸ்தர்கள், பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.