நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது. நெல்லிக்குப்பம் சாலிவாகன தெரு முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டுவிழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் நடந்தது. 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு சிற ப்பு யாகம் நடத்தி அம்மனுக்கு சங்காபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூ ஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார்.