தாண்டிக்குடி: தாண்டிக்குடி கீழ்மலைப்பகுதியில் ஆன்மிக முக்கியத்துவம் பெற்ற கிராமம் பூலத்துõர். இதற்கு சான்றாக உள்ளது, படையெடுத்தவர்கள் சிலையாகிப் போன நிகழ்வுதான். இது என்னடா, அதிசயம் என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் இங்குவரை கேட்கிறது. பல நுõற்றாண்டுக்கு முன் விவசாயம் செழித்து செழுமையான கிராமமாக இருந்ததால் இவ்வூரை சீமை பூலத்துõர் என அழைப்பர். இக்கிராமத்தை கைப்பற்ற நகர் பகுதியிலிருந்து யானை, குதிரையுடன் வீச்சு அரிவாள், வேல் கம்புடன் எதிரிகள் முற்றுகையிட முயன்றனர். குதிரைக்கல் ஆறு அருகே வந்தபோது இக்கிராமத்தில் முன்னோர்களால் வழிபட்ட ராக்காச்சியம்மனே கிராமத்திற்கு காவலாக இருந்தார் என்கின்றனர்.
கிராமத்தை நோக்கி படையெடுத்து வந்தவர்களை, இந்த அம்மன் கற்சிலையாக உருமாற்றி உறைந்து போகும்படி செய்துவிட்டாராம். அதன்படி இன்றும் குதிரை, யானை, வீரர்கள் உள்பட 20 கற்சிலைகள் உள்ள காட்சியை இங்கு காணலாம். ஆடி மாதம் ஊரை காப்பாற்றிய ராக்காச்சியம்மனுக்கு வரிவசூலித்து, சமபந்தி விருந்து நடத்தி, விழா நடத்தி கிராம ஒற்றுமையை போற்றுக்கின்றனர். இக்கிராமத்தில் நிகழும் திருவிழாக்களுக்கு தொலைவில் உள்ள மண்டுப்பாறையில் உள்ள டமாரத்தை ஒலித்து அறிவிப்பு செய்வதை இன்றளவும் கடைபிடிக்கின்றனர். முன்னோர் வழியில் வந்த இப்பகுதியினர், மூத்தோர் நினைவுகளை வருவோரிடம் தயக்கமின்றி அசைபோட்டு எடுத்துக் கூறுகின்றனர்.