பரமக்குடி: கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி உண்டு. கோயில் இருந்தால் திருவிழா இருக்கும். மக்கள் கூடி வழிபாடு நடத்தி, விருந்து உண்பது தான் திருவிழாவின் சிறப்பு. கூட்டு முயற்சியால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்த தான் திருவிழாக்களில் தேரோட்டம் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர், நம் முன்னோர்கள். ஊர் கூடி தேர் இழுப்போம் என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில், பரமக்குடியில் நூற்றாண்டு காலமாக நடந்து வரும் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இத்திருவிழாவின் ஒரு பகுதியாக, குதிரை வாகனத்தில் எழுந்தருளும் பெருமாள், ஆயிரம் பொன் சப்பரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த சப்பரத்தில் 4 சக்கரங்கள் முதல் 30 அடி சுற்றளவு, 40 அடி உயரம் கொண்ட உச்சி கோபுரம் வரை தனித்தனியாக ஜோடிக்கப்படுகிறது. இத்தேரை பக்தர்கள் ஒன்று கூடி இரவில் வைகை ஆற்று மணலில் ஆற்றுப்பாலம் முதல் காக்காதோப்பு (வண்டியூர்) வரை 3 கி.மீ., துõரம் இழுப்பதன் மூலம், பரமக்குடி சித்திரை திருவிழாவிற்கே ஒரு மகிமையை கிடைக்கிறது. இத்தேரில் 4 இடங்களில் கட்டப் படும் சுமார் 50 அடி நீள வடத்தை (கயிறு) 300 க்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் மட்டுமே இழுக்க முடியும். வருடத்தில் ஒரு முறை மட்டுமே நடக்கும் இந்த பிரமாண்ட தேரோட்டத்தில் நீங்களும் வடம் இழுக்க ஆசையா...மே 4 ம் தேதி இரவு 7 மணிக்கு பரமக்குடி நோக்கி வாருங்கள்.