விருத்தாசலம்: அமாவாசையொட்டி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விருத்தாசலம் சந்தைத்தோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் காலை சித்தி விநாயகர், புற்று மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் உட்பிரகார வலம் வரும் நிகழ்ச்சி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.