புதுச்சேரி: வில்லியனுார் துாய லுார்து அன்னை மாதா கோவிலில் ஆடம்பர தேர்பவனி கோலகலமாக நடந்தது. வில்லியனுார் துாய லுார்து அன்னை மாதா கோவிலில் ஆண்டு பெருவிழா 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 18ம் தேதி வரை தின மும் காலை, மாலைகளில் சிறப்பு திருப்பலியும், சிறிய தேர்பவனி நடந்தது. நவ நாட்களில் மறையுரை வழங்கப்பட்டது. ஆடம்பர தேர்பவனி விழா காலை 5:30 மணிக்கு திருப்பலி துவங்கியது. இரவு 7:30 மணிக்கு புதுச்சேரி - கடலுார் உயர் மறைமாவட்ட பேராயர் ஆனந்தராயர் முன்னிலையில் முக்கிய வீதிகளில் ஆடம்பர தேர்பவனி நடந்தது. பக்தர்கள் மலர்கள் துாவி லுார்து அன்னையை வழிப்பட்டனர். இன்று 20 ம்தேதி காலை 6 மணிக்கு திருப்பலிக்கு பின் கொடியேற்றத்துடன் ஆண்டு பெருவிழா நிறைவு பெருகிறது. ஏற் பாடுகளை பங்குதந்தை ரிச்சர்ட் அடிகளார் செய்தி ருந்தார்.
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சாலையில் உள்ள தக்களூர் தருமபுரத்தில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் புனித செபஸ்தியார் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் காலை, மாலையில் சிறப்பு திருப்பலி நடந்து வந்தது. கடந்த 16ம் தேதி சிறப்பு திருப்பலியுடன் மூன்று சிறிய தேர்பவனி நடந்தது. நேற்று முன்தினம் காலை சிறப்பு திருப்பலி, மாலையில் அலங்கரிக்கப்பட்ட 5 பெரிய தேர்பவனி நடந்தது. தேர்பவனி தக்களூர் கிராமத்தை வலம் வந்து ஆலயத்தை அடைந்தது. உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.