செஞ்சி: செஞ்சி தாலுகா, வடவெட்டி ரங்கநாதபுரம் அங்காளம்மன் கோவிலில், நேற்று முன்தினம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அங்காளம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 7:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9:00 மணிக்கு இசைக்கச்சேரி, வாணவேடிக்கை நடந்தது. இரவு 11:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள், பாடல் களை பாடி அம்மனை வழிபட்டனர். அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழுவினர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.