காரைக்கால்: காரைக்கால் கடைத்தெரு மகா மாரியம்மன் கோவிலில் சுவாமி, குபேர லட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காரைக்கால் கடைத்தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தமிழ் புத்தாண்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த 13ம் தேதி பூச்சொரிதலுடன் விழா துவக்கியது. திருவிளக்கு பூஜையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். நேற்று முன் தினம் காலை அம்மனுக்கு அபிஷேகம், அன்ன தானம் மற்றும் குபேர லட்சுமி அலங்காரம் நடந்தது.