பதிவு செய்த நாள்
24
ஏப்
2015
11:04
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. அடுத்த மாதம், 3ம் தேதி வரை நடக்கிறது. திருத்தணி முருகன் மலைக்கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, நேற்று காலை 8:45 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது.பின், காலை 9:00 மணிக்கு, மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு, கேடய வாகனத்தில், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மாடவீதியில் வீதியுலா வந்தார். இன்று, காலை 9:30 மணிக்கு, வெள்ளி சூரிய பிரபையிலும், இரவு, 7:00 மணிக்கு, பூத வாகனத்திலும், வீதியுலா நடக்கிறது. வரும், 30ம் தேதி இரவு 8:00 மணிக்கு, தெய்வானை திருக்கல்யாணம், மே, 2ம் தேதி, உற்சவர் சண்முகருக்கு, தீர்த்தவாரி நடக்கின்றன.