பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2015 11:04
திருவாடானை : திருவாடானை அருகே திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோயிலில் சித்திரை திருவிழா நேற்று காலை 8.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதையொட்டில வல்மீகநாதர், பாகம்பிரியாள் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.,27 ல் திருக்கல்யாணமும், மே 1ல் தேரோட்டமும் நடைபெறுகிறது. விழா நாட்களில் அம்மன் வெள்ளி ரிஷபம், குதிரை, நந்தி, சிம்மம் போன்ற பல வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். கொடியேற்ற விழா நிகழ்ச்சியில் தேவஸ்தான கண்காணிப் பாளர் சரவணகணேசன், கவுரவ கண்காணிப் பாளர் முத்துகண்ணன் கலந்து கொண்டனர்.