மேல்மருவத்தூர் ஆன்மீக மன்றத்தினர் தொடங்கிய அரசு மருத்துவமனை வார்டு புனரமைக்கும் பணி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2015 12:04
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் கடந்த 20042005ம் சட்ட மன்ற உறுப்பினர் மேம் பாட்டு நிதி ரூ 20 லட்சத்தில் 20 படுக்கைகள் கொண்ட ஆண்கள் வார்டு கட்டப்பட்டது. 10 ஆண்டுகள் கடந்த நிலையில் அந்த கட்டடத்தின் தரை, கழிவறைகள் மற்றும் மின் சாதனங்கள் பழுதடைந்துவிட்டன.
அதனால் அந்த கட்டடத்தை நோயாளிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அந்த க ட்டடத்தை மேல்மருவத்தூர் அடிகளாரின் 75வது அவதாரத்திருநாளை முன்னிட்டு தஞ்சை மற்றும் சீ ர்காழி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மன்றம் சார்பில் ரூ 4 லட்சம் மதிப்பில் புனரமைக்க தீர் மானிக்கப்பட்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்த ப்பட்டன.
ஆதிபராசக்தி ஆன்மீக மன்ற தஞ்சை மாவட்ட தலைவர் வாசன்,சீர்காழி கிளைதலைவர் பா ரதி மற்றும் உறு ப்பினர்கள் பூஜைகளை நடத்தினர்.இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசே கர்,பொறியாளர் ராஜராஜன்,அதிர்வுகள் அமைப்பின் பிரதிநிதிகள் குலோத்துங்கன்,ஹார்டுவேர் சண் முகம், அரசு மரு த்துவமனை டாக்டர் அருன்ராஜ்குமார் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.