வால்பாறை:மேல்மருத்துவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில், பங்காரு அடிகளாரின் 75 வது அவதாரத்திருநாள் கொண்டாடப்பட்டது.வால்பாறை மேல்மருத்துவத்துார் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பில், நடந்த விழாவிற்கு துணைத்தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
விழாவிற்கு மாவட்ட ஆன்மிக இயக்க நிர்வாகக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வால்பாறை தலைவர் தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பழைய பஸ் ஸ்டாண்டலிருந்து புறப்பட்ட ஆன்மிக ஊர்வலத்தை, வால்பாறை கூட்டுறவு நகர வங்கித்தலைவர் அமீது, துணைத்தலைவர் மயில்கணேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். பின்னர் நடந்த விழாவில் அடிகளாரின் 75 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கேக் வெட்டப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் பால்துரை, பொருளாளர் ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். வழிபாட்டுமன்ற பொறுப்பாளர் குமாரிசுப்பிரமணியம் நன்றி கூறினார்.