பதிவு செய்த நாள்
27
ஏப்
2015
01:04
செஞ்சி: செஞ்சி மாரியம்மன் கோவில் 6ம் நாள் விழாவை முன்னிட்டு, சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செஞ்சி கோட்டை ராஜகிரி மலை மீதுள்ள கமலக்கன்னியம்மன், ராஜகாளியம்மன், பீரங்கிமேடு மாரியம்மன் ஆகிய கோவில்களில் சித்திரை தேர் திருவிழா, கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு தினமும் கமலக்கன்னியம்மன், மகா மாரியம்மன், ராஜகாளியம்மன், கோட்டை வீரன், அம்மச்சார் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அங்காரம் செய்து வருகின்றனர். இரவில் சாமி வீதி உலா நடக்கிறது. 6ம் நாள் விழாவாக மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. நாளை (28ம் தேதி) காலை 6:00 மணிக்கு, 108 பால் குட ஊர்வலம் நடக்க உள்ளது. காலை 10:00 மணிக்கு மகா மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தலும், பகல் 1:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்க உள்ளது.