துாய அடைக்கல அன்னை ஆலயத்தில் ஐந்து தேர்பவனி வீதி உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2015 03:04
திருவாரூர்: திருவாரூர் அருகே முகந்தனுாரில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த துாய அடைக்கல அன்னை ஆலயத்தில் ஐந்து தேர்பவனி வீதி உலா காட்சி நேற்று முன் தினம் இரவு நடந்தது. திருவாரூர் மாவட்டம், முகந்தனுார் பட்டுடையான் இருப்பில் மிகவும் பழ மை வாய்ந்த (300 ஆண்டுகள்) துாய அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. அப்பகுதியில் விவசாயம் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் கருகி சேதமடைந் தது. ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தியதும் மழை பெய்த்து அப்போதைய ஆண்டில் விவசாயம் செழித்து, வறட்சி நீங்கியதால் அப்போதியில் இருந்து விழா எடுத்து சிறப்பித்து வருகின்றனர். இந்த ஆண்டிற்கான விழா கடந்த 17 ம் தேதி துவங்கியது. உபயதாரர்கள் பல் வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.நேற்று முன் தினம் இரவு, நாட்டில் சாதி, மத, இன வேறு பாடு இல்லாமல் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழவும், வறட்சி நீங்கி, மண், மழைவளம் பெறுக பங்கு தந்தை பால்ராஜ் அடியார் சிற ப்பு வழிபாடு நடத்தினார். 10.00 மணிக்கு காவல் சமதை, ஆரோக்கியநாதர், அந்தோணியார், அடை க்கலமாதா மற்றும் லுார்துமாதா அலங்கரிக் கப்பட்ட தனித்தனி தேரில் வீதி யுலா வந்தனர். அப்பகுதியினர் வீடுகளில் இருந்து மெழு வர்த்தி ஏந்தி வந்தது ஊர்வலத்தில் சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் பவனி நேற்று காலை 6.00 மணிக்கு ஆலயத்தை வந்தடைந்தது.