ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் பச்சைமலை, பவளமலை, ஆண்டவர்மலை என்ற மூன்று மலைகளில் முருகப்பெருமான் வெவ்வேறு வடிவங்களில் காட்சி தருகிறார். பச்சைமலையில் பாலமுருகனாகவும், பவளமலையில் முத்துக்குமார சாமியாகவும், ஆண்டவர் மலையில் பாலதண்டாயுத பாணியாகவும் அருள்பாலிக்கிறார்.