சிவன்கோயில்களில் எந்தெந்த நேரத்தில் ஆண்டவனைத் தரிசிக்கலாகாது என்பதற்கும் விதிமுறையை நம் முன்னோர் வகுத்துள்ளனர். குறிப்பாக நாம் கோயிலிற்குச் செல்லும்போது, அது பூட்டப்பட்டிருந்தால் நாம் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு வந்துவிடுவோம். இது இயல்பு, ஆனால் சிவாச்சாரியார் தீபம் ஏற்றி ஆராதனை காட்டிய பின்தான் நாம் தரிசனம் செய்ய வேண்டும். திரை போட்ட நேரத்திலும், தீபம் ஏற்றாத நேரத்திலும் சாமி தரிசனம் செய்யலாகாது.