பதிவு செய்த நாள்
04
மே
2015
10:05
ஆர்.கே.பேட்டை: சந்தான வேணுகோபால சுவாமி திருக்கல்யாணம், புஜ்ஜிநாயுடு கண்டிகையில், நேற்று முன்தினம் நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, எஸ்.வி.ஜி.புரம், சந்தான வேணுகோபால சுவாமி திருக்கல்யாணம், ஆண்டுதோறும் சித்திரை மாதம், புஜ்ஜிநாயுடு கண்டிகையில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை, எஸ்.வி.ஜி.புரம் கோவிலில் இருந்து, உற்சவர், புஜ்ஜிநாயுடு கண்டிகைக்கு ஊர்வலமாக புறப்பட்டார். விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில், மாலை 5:00 மணிக்கு, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மண்டபத்தில், பாமா, ருக்மணி தேவியர் மற்றும் சந்தான வேணுகோபால சுவாமி எழுந்தருளினர். திரளான பக்தர்கள் முன்னிலையில், திருக்கல்யாணம் நடந்தது. பின், பாமா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி வீதியுலா எழுந்தருளினர். ஊர்வலத்தில், கோலாட்டம் மற்றும் பஜனை நடந்தது.