புதுச்சத்திரம்: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் 52 வது ஆண்டு செடல் உற்சவம் நேற்று நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் ÷ காவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி 52ம் ஆண்டு செடல் உற்சவம் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், இரவு வீதியுலா நடந்தது. சிறப்பு விழாவான செடல் உற்சவம் நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை 7:00 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், பகல் 2:00 மணிக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் செடல் போட்டுக்கொண்டு காவடி மற்றும் தேர் இழுத்தனர். இதில் 10 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேன், டெம்போ, கிரேன் போன்ற வானங்களை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். புதுச்சத்திரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.