20 ஆண்டுக்குப்பின் நடந்த உடையாளி பொம்மையசுவாமி விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2015 11:05
சாணார்பட்டி,: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மடூர் பண்ணைப்பட்டியில் உள்ள ஒக்கலிகர் சமுதாயத்தினரின் உடையாளி பொம்மைய சுவாமி கோயில் பெரிய கும்பிடு விழா 20 ஆண்டுகளுக்கு பின் நடந்தது.கடந்த 1937 முதல் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்விழா நடந்தது. அதன் பிறகு 1995 முதல் 20 வருடங்களுக்கு ஒரு முறை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கடந்த மே 4 ல் பொம்மைய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜையுடன் வண்டி அழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி உட்பட பலமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பகலில் மாலை கோயிலில் பொதி வாசலை மெழுகி மஞ்சள் பொடி கோலமிட்டு அலங்கரிக்கப்பட்டது. மாலையில் மேள வாத்தியம் வாண வேடிக்கை முழங்க பொதிவாசலுக்கு சுவாமி அழைப்பு நடந்தது. இரவு இசை கச்சேரி நடந்தது. நேற்று காலை கோயில் ஸ்தானிகர்கள்(பூஜாரிகள்) போனம் சுமத்தல் நடந்தது. பகலில் முக்கிய நிகழ்ச்சியான உடன் பிறந்த சகோதரிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட (நெல், தேங்காய் அடங்கிய) விலுவை பானையில் காணிக்கை செலுத்தி பிரசாதம் பெற்றனர். தொடர்ந்து பங்காளிகள் தங்களதுமனைவிகளுடன் மாலை கோவிலை சுற்றி வந்து கும்பிடு வாங்கும் நிழ்ச்சி நடந்தது. இன்று எருதுகள் சேசைப்படி ஏறுதல், மஞ்சள் நீராட்டு, சுவாமி கோயில் சென்றடைதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைகிறது.