காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த மாதம் 25ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதி யுலா நடைபெற்று வந்தது. முதல் நாள் இரவு சிம்ம வாகனத்தில் வீதியுலாவில் சுவாமி அருள்பாலித்தார். கடந்த 29ம் தேதி இரவு கருட சேவையும், 2ம் தேதி மாலை திருக்கல்யாணமும், இரவு புஷ்ப பல்லக்கும் நடந்தது. முக்கிய விழாவான தேர்திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மீண்டும் தேர் நிலையை அடைந்தது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் தோத்தாத்ரி ஆகியோர் செய்து வருகின்றனர்.