கம்பம் கவுமாரியம்மன் திருவிழா: அலை அலையாய் வந்த அக்னி சட்டிகள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2015 06:05
கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக அக்னி சட்டிகள் அலை அலையாய் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினார்கள். கம்பம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது கவுமாரியம்மன் கோயில். சுயும்புவாக அம்மன் எழுந்தருளியுள்ளது இந்த கோயிலின் சிறப்பம்சமாகும். ஆண்டுதோறும் 21 நாட்கள் சித்திரை திருவிழா கொண்டாடப்படும். இந்த கோயிலின் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்.21 ல் சாட்டுதல் செய்யப்பட்டு ஏப். 22 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. முன்னதாக கம்பராயப்பெருமாள் கோயிலில் வைக்கப்பட்ட உற்சவர் அழைக்கப்பட்டு கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் எழுந்தருனினார். தொடர்ந்து முக்கொம்பு மற்றும் கரத்துடன் ஊர்வலம் நடைபெற்றது. ஏப். 22 முதல் இந்த மாதம் 12 ம் தேதி வரை 21 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தவரின் மண்டகப்படி நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக அக்னிசட்டி எடுத்தல் நடைபெற்றது. நாட்டுக்கல், வரதராஜபுரம், வடக்குபட்டி, மணிநகரம், பார்க்ரோடு, கம்பமெட்டு ரோடு, காந்திஜிவீதிகளில் இருந்து நேற்று மாலை முதல் அக்னி சட்டிகள் வர ஆரம்பித்தது. இரவு 10 மணிக்கு மேல் அலை அலையாய் ஆயிரக்கணக்கில் அக்னி கட்டிகள் பக்தர்களால் கோயில் வளாகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. காலை கோயில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நுõற்றுகணக்கான பெண்கள் பொங்கல் வைத்து குலவையிட்டு அம்மனை பிரார்த்தனை செய்தனர்.