திருப்பரங்குன்றத்தில் பள்ளி கொண்ட பெருமாள் சிலை பிரதிஷ்டை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2015 01:05
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம் கூடல் மலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பள்ளி கொண்ட பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 10.30 மணிக்கு நடக்கிறது. நேற்று காலை யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று இரவு 3 அடி நீளம், 3 அடி அகலம், ஒன்றரை டன் எடையிலான மூலவர் பெருமாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று கும்பாபிஷேகத்துடன் தண்டபாணி சுவாமி, கூடல் நாயகர், கூடல் அம்பிகைக்கு வருடாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தாக்கள் ராமலிங்கம், தட்சிணாமூர்த்தி செய்து வருகின்றனர்.