ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2) முயற்சியில் வெற்றி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2015 12:05
புத்திசாலித்தனம் மிக்க ரிஷப ராசி அன்பர்களே!
இந்த மாதம் 11ல் இருக்கும் கேது நன்மையை வாரி வழங்குவார். சுக்கிரன் மே 31ல் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். சனி பகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், ஜூன் 12 முதல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு வருகிறார். இதனால் முயற்சியில் வெற்றியை தருவார். 5-ல் ராகு, 3-ல் குரு ஆகியோரால் வீண் விரயம் ஏற்படலாம். சிக்கனமாக இருப்பது நல்லது. பணியாளர்கள் இடமாற்றத்திற்கு ஆளாகலாம். புதன் மே 24-ந் தேதி வக்கிரத்தில் சிக்குவதால் பிரச்னையைச் சமாளித்து முன்னேற்றம் காணலாம். சுக்கிரன் சாதகமான இடத்தில் இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் தாராளமாக கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும்.
தொழில், வியாபாரத்தில் மே 31 வரை அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். மே 24க்குப் பிறகு எதிரியால் தொல்லை உருவாகலாம். பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதற்கேற்ப ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.
மாணவர்கள் பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவர்.
விவசாயிகள் கால்நடை மூலம் நல்ல வருமானம் காண்பர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகலாம்.
பெண்கள் கணவரின் அன்பைப் பெற்று மகிழ்வர். புத்தாடை, அணிகலன் கிடைக்கப் பெறுவர். அடிக்கடி விருந்து, விழா என செல்வீர்கள்.
நல்ல நாள்: மே 15, 18, 19, 23, 24 ஜூன் 2, 3, 8, 9, 10, 11, 15
கவன நாள்: ஜூன் 4, 5 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 6,7 நிறம்: வெள்ளை, சிவப்பு
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம்.செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டால் குழப்பம் நீங்கி தைரியம் பிறக்கும்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »