பதிவு செய்த நாள்
13
மே
2015
01:05
மதிநுட்பமாக செயல்படும் கடக ராசி அன்பர்களே!
இந்த மாதம் 11-ம் இடமான ரிஷபத்தில் இணைந்து இருக்கும் புதன்,சூரியன்,செவ்வாய் நற்பலனை கொடுப்பார்கள். சுக்கிரன் மே 31க்கு பிறகு உங்கள் ராசிக்கு வந்து நன்மை கொடுப்பார். ராகு கன்னியில் இருந்து முன்னேற்றத்தை தருவார். தற்போது சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், ஜூன் 12 முதல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு வருகிறார். இந்த காலத்தில் நன்மையை சனி வழங்குவார். செவ்வாயால் முயற்சியில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சூரியன், புதனால் பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். அரசு வகையில் நன்மை உண்டாகும். உடல் உபாதை நீங்கி ஆரோக்கியம் மேம்படும். மே 24 க்கு பிறகு பெண்களின் ஆதரவு உண்டு. அவர்களால் பொன், பொருள் சேரும். மே 31க்கு பிறகு விருந்து விழா என சென்று வருவீர்கள்.கணவன்-மனைவி இடையே அன்புணர்வு கூடும். மே 28,29ல் புத்தாடை, அணிகலன் வாங்குவீர்கள்.
தொழில், வியாபாரத்தில் வருமானத்திற்கு குறைவிருக்காது. வெளியூர்ப்பயணம் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு அறிந்து நிறைவேற்றுவீர்கள். பணியாளர்களுக்கு நிர்வாகதத்தினரின் ஆதரவால் வளர்ச்சி உண்டாகும்.
கலைஞர்கள் விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். மே 31 க்குப் பிறகு உங்களுக்கு சாதகமான காற்று வீசும்.
அரசியல்வாதிகள் சிறப்பான நிலை காண்பர். மக்கள் மத்தியில் எதிர்பார்த்த புகழ் உருவாகும்.
மாணவர்களுக்குப் புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயிகள் பயறு வகைகள், பசுவளர்ப்பு மூலம் வருமானம் காண்பர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும்.
பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் நெருக்கமாகப் பழகுவர்.
நல்ல நாள்: மே 16, 17, 18, 19, 23, 24, 28, 29, ஜூன் 6, 7, 12, 13, 14, 15
கவன நாள்: ஜூன் 8, 9 சந்திராஷ்டமம், கவனம்.
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9 நிறம்: செந்துõரம், பச்சை
பரிகாரம்: சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.