மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2,) மனம் மகிழும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2015 01:05
பிறர் மனம் மகிழப் பேசும் மகர ராசி அன்பர்களே!
கேது, குரு, சந்திரன் நன்மை தருவர். புதன்மே 24ல் வக்கிரம் அடைந்து மேஷத்திற்கு மாறி நன்மை கொடுப்பார். ஆனால் ஜூன் 6ல் வக்கிரம் நிவர்த்தியாகி பழைய இடத்திற்கே வந்து குறைந்த பலன் தருவார். தற்போது நன்மை தந்து கொண்டிருக்கும் சனிபகவான் ஜூன் 12 முதல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு வருகிறார். அதன்பின் அவரால் கிடைக்கும் நற்பலனை சற்று தளர்த்துவார்.குடும்பத்தில் பண வரவுக்கோ, மன மகிழ்ச்சிக்கோ குறை இருக்காது. பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். மே 15ஜூன் 10,11ல் புத்தாடை, நகை வாங்கலாம். வியாபாரம்,
தொழிலில் போட்டி தலைதுõக்கும் என்றாலும் லாபம் உண்டு. யாரையும் நம்பி பணத்தையோ, முக்கிய பொறுப்பையோ ஒப்படைக்க வேண்டாம். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.ஜூன் 6க்கு பிறகு அதிக சிரத்தை எடுத்தே பணியாற்ற வேண்டியது இருக்கும். வெளியூர் செல்லும் நிலை உருவாகலாம்.யாருடைய உதவியையும் நாடாமல் தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைத்து முன்னேறுங்கள். மே30,31ஜூன்1ல் சிறப்பான பலன்களைக் காணலாம்.
கலைஞர்களுக்கு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படலாம். மே 31க்கு பிறகு பெண்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி தாமதமாகும். உங்கள் செல்வாக்குக்கு எந்த பாதிப்பும் வராது. மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு சிறப்பாக அமையும்.
விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் உண்டு. அதிக முதலீடு போடும் விவசாய பயிரை தவிர்க்கவும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் சற்று தாமதமாகும்.
பெண்கள் எந்த பிரச்னையிலும் விட்டுக் கொடுத்து போகவும். மே 23,24-ந் தேதிகளில் நகை வாங்கலாம். சிலருக்கு விருந்து விழா செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
நல்ல நாள்: மே 15, 23, 24, 30, 31 ஜூன் 1, 2, 3, 6, 7, 10, 11.
கவன நாள்: மே 25, 26, 27 சந்திராஷ்டமம், கவனம்.
அதிர்ஷ்ட எண்: 3,5 நிறம்: மஞ்சள் சிவப்பு
பரிகாரம்: நாக தேவதையை வணங்கி வாருங்கள். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »