காரைக்குடி: காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் பெருந்திருவிழா, கடந்த 12-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் வெள்ளி கேடயத்தில் அம்பாள் புறப்பாடும், பக்தி உலாவும், இரவு 9 மணிக்கு காமதேனு, அன்னம், கைலாசம், ரிஷப வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 19ம் தேதி நடந்தது. தேரோடும் வீதி வழியாக, அம்பாள் காட்டம்மன் கோயிலை சென்றடைந்தார். 20-ம் தேதி கொப்புடையம்மன் கோயிலுக்கு தேர் திரும்புதல் நடந்தது. நேற்று முன்தினம் தெப்ப திருவிழாவை முன்னிட்டு, இரவு 11 மணிக்கு தெப்பத்தில் அம்பாள் உலா வந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் செல்வி செய்திருந்தனர்.