Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் ... கோதண்டராம சுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம் கோதண்டராம சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ணர் கோவில்களில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கிருஷ்ணர் கோவில்களில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

23 மே
2015
11:05

கிருஷ்ணர் கோவில்களில் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. முன்னதாக, கும்பாபிஷேக பூஜைகள், கணபதி ஹோமத்துடன் நேற்று முன்தினம் துவங்கின. நேற்று காலை, 7:00 மணிக்கு பிரதான ஹோமம், புண்யாக வாசனமும், காலை 9:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டன.

சிறப்பு அபிஷேகம்: தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு, புதிதாக அமைக்கப்பட்ட கோவில் விமானத்தின் மீது கலசநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. மாலை 4:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் திரளான கிராம பெண்கள் பொங்கல் வைத்து, மூலவருக்கு படைத்து வழிபட்டனர். மாலை 6:00 மணிக்கு, கோலாட்டம், பரத நாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள்; இரவு, உற்சவம் நடந்தன. இதுபோல், காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய காட்டுப்பாக்கம் கிராமத்தில், பழமையான, நவநீத கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நான்கு மாதங்களுக்கும் மேலாக திருப்பணி நடைபெற்று வந்தது.

பக்தர்கள் பங்கேற்பு: அனைத்து திருப்பணிகளும் முடிவடைந்த நிலையில், புதன்கிழமை மாலை 6:00 மணியளவில், வாஸ்து ஹோமம் உட்பட பல்வேறு யாகங்கள் நடைபெற்றன. நேற்று முன்தினம் மாலை, விமான கலச திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று காலை 8:00 மணிஅளவில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, புனிதநீர், கோவில் கலசத்தின் மீது ஊற்றப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில், பெரிய காட்டுப்பாக்கம் கிராமத்தைச் சுற்றி உள்ள, பக்தர்கள் கலந்து கொண்டு, நவநீத கிருஷ்ணனின் அருள் பெற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar