பதிவு செய்த நாள்
23
மே
2015
11:05
ஊத்துக்கோட்டை: செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர். தாமரைப்பாக்கம் அடுத்த, அம்மனம்பாக்கம் கிராமத்தில், கொற்றலை ஆற்றின் மேல், கிராமவாசிகள் பங்களிப்புடன், புதிதாக செல்லியம்மன் கோவில் கட்டப்பட்டது. பணிகள் முடிந்து, நேற்று காலை, 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, கடந்த, 20ம் தேதி, காலை, 7:00 மணிக்கு மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவற்றுடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. நேற்று காலை, 6:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, நான்காம் கால யாக பூஜை, ரக் ஷாபந்தனம் ஆகிய நிகழ்ச்சிகளும்; காலை, 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், விசேஷ பூஜைகளும் நடத்தப்பட்டன. மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.