பதிவு செய்த நாள்
23
மே
2015
11:05
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் முடங்கியதால், இதுவரை முடிந்த திருப்பணிகள் பொலிவு இழந்து காணப்படுகிறது. முதல்வராக ஜெ., பதவி ஏற்றதும் கும்பாபிஷேக பணிகளை விரைவு படுத்தி, குடமுழுக்கு விழாவிற்கு தேதி அறிவிக்கப்டும், என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஜனவரியில், ராமேஸ்வரம் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்திட திட்டமிட்டு, 2013- 14 ம் ஆண்டுகளில் ரூ.7 கோடியில் திருப்பணிகள் துவங்கின. ஆனால், அப்போதைய முதல்வராக இருந்த ஜெ., பதவி இழந்ததும், திட்டமிட்டபடி ஜனவரியில் கும்பாபிஷேகம் நடத்த, இந்து அறநிலைதுறை அதிகாரிகள் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. இதனால், அனைத்து திருப்பணிகளும் பாதி முடிந்த நிலையில் முடங்கின. கோயில் நிதி ரூ.50 லட்சத்தில், கோயிலின் 3 ம் பிரகாரத்தில் துõண்கள், சிற்பங்களை மராமத்து செய்து, உப்பு காற்றில் சேதமடையாத வகையில் பல வண்ணங்களில் பெயின்ட் பூசுப்பட்டது.
இப்பணி முடிந்து ஓராண்டிற்குள், மேற்கூரை, பல துõணில் பெயின்ட் உதிர்ந்து விட்டது. இது தவிர. ரூ. 50 லட்சத்தில் சுவாமி, அம்மன் சன்னதி அமைந்துள்ள முதல் பிரகாரத்தின் கருங்கல் துõண்கள், சிற்பங்கள் பழமை மாறாமல் இருக்க, வாட்டர் வாஷ் செய்யப்பட்டு, ரசாயண வார்னிஷ் பூசும் பணி 100 சதவீதம் முடிந்தது. ராம்கோ குரூப் நிறுவனம் சார்பில், ரூ.27 லட்சத்தில் கோயில் கிழக்கு ராஜகோபுரம், கோயில் நிதி ரூ. 9 லட்சத்தில் மேற்கு ராஜகோபுரம் ஆகியவற்றில் மராமத்து செய்யப்பட்டது. அவற்றுக்கு பிரைமர் பெயின்ட் பூசி பல மாதம் ஆகியும், தரமான சில்வர் கிரே அல்லது பஞ்சவர்ண கலரில் பெயின்ட் பூசும் பணி நடைபெற இருந்த நிலையில், உயர் அதிகாரிகள் உத்தரவு கிடைக்காததால், தற்போது கோபுரங்கள் பொலிவு இழந்து காணப்படுகிறது. மேலும், சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், விநாயகர், முருகன், மகா லெட்சுமி விமானங்களுக்கு மராமத்து செய்து, வர்ணம் பூசும் பணி முழுமை பெறாமல் உள்ளது. கடந்த 2014 ல் நடக்க வேண்டிய கும்பாபிஷேகம், அரசியல்வாதிகள், அதிகாரிகள் அலட்சியத்தால் திருப்பணிகள் தரமற்ற நிலையில், நடந்து, முடியாமல் முடங்கி உள்ளது . மீண்டும் 5வது முறையாக முதல்வராக பதவி ஏற்கும் ஜெ., ராமேஸ்வரம் கோயில் திருப்பணியை விரைவுபடுத்தி, கும்பாபிஷேகம் நடத்திட உத்தரவிட வேண்டும் என்பதும், கும்பாபிஷேகம் நடைபெறும் தேதியை விரைவில் அறிவிக்க வேண்டும் என்பதுமே பக்தர்களின் எதிர்பார்ப்பு.