Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ... கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி கொடியேற்றம்! கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் விசாக திருவிழா தொடக்கம்!
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் விசாக திருவிழா தொடக்கம்!

பதிவு செய்த நாள்

25 மே
2015
10:05

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாக திருவிழா சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது. மாலையில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனை முடிந்து சிவாச்சாரியார்களால் காப்பு கட்டப்பட்டது. இரவு 7 மணிக்கு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, வசந்த மண்டபம் சென்றடைந்தனர். மண்டபத்தின் மைய பகுதி மேடையின் அடிப்பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டு ஊஞ்சலில் எழுந்தருளினர். அங்கு வசந்த உற்சவம் முடிந்து அருள்பாலித்தனர். இந்த உற்சவம் மே 30 வரை நடக்கிறது.விசாக பால்குட திருவிழாவை முன்னிட்டு, ஜூன் 1 அதிகாலை 5 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, காலை 7 மணிக்கு சுவாமி விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவர். பக்தர்கள் பாதயாத்திரையாக சுமந்துவரும் பாலால், பகல் 2 மணி வரை சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும். ஜூன் 2 காலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, தங்ககுதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகம் மொட்டையரசு திடலில் எழுந்தருளுவர். அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து இரவு பூப்பல்லக்கில் கோயில் திரும்புவார். சோலைமலை முருகன் கோயில் அழகர்கோவில் மலை மீது உள்ள சோலைமலை முருகன் கோயிலில் முதல் முறையாக இந்த ஆண்டு முதல் வைகாசி விஷாக திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. இக்கோயிலில் தமிழ் வருட பிறப்பு, கந்தசஷ்டி விழா, கார்த்திகை, தைப்பூசம் போன்றவை ஒரு நாள் விழாவாக மட்டுமே நடைபெறும். கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் முடிந்த பின் புதிதாக தங்க கொடிமரம், சஷ்டி மண்டபம் அமைக்கப்பட்டது. அதைதொடர்ந்து இந்த ஆண்டு முதல் வைகாசி விஷாக விழாவை 10 நாட்கள் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. வைகாசி விஷாக விழா நேற்று காலை யாகசாலை, சிறப்பு பூஜைகள் நடந்தன. தினமும் பகலில் சஷ்டி மண்டபத்தில் இருந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது. ஜூன் 1ல் நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி வரதராஜன் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar