பதிவு செய்த நாள்
25
மே
2015
10:05
கடலூர்: கடலூர், பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழாவையொட்டி கடந்த 16ம் தேதி எல்லைக் கட்டப்பட்டது. தொடர்ந்து பிடாரி அம்மனுக்கு சிறப்பு பூ ஜை நடந்தது. நேற்று கொடியேற்றத்தையொட்டி காலை 6:00 மணிக்கு பாடலீஸ்வரர், அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சோமாசகந்தர் சன்னதியில் யாத்ராதானம், கொடிமரம் அருகில் பஞ்ச மூர்த்திகளை வைத்து விநாயகர் பூஜை, புண்ணியாகவசனம், கொடிமரத்தில் ஆவாசனம் நடந் தது. வேதமந்திரங்கள், மேள தாளங்கள் முழங்க ரிஷபம் பொறிக்கப்பட்ட கொடி, மரத்தில் ஏற்றப்பட்டது. இந்து அறநிலையத் துறை உதவி ஆணை யர் ஜோதி, செயல் அலுவலர் ரத்தினாம்பாள், உபயதாரர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். நாகராஜ் சிவாச்சாரியார் தலைமையில் பூஜை நடந்தது. வரும் 28ம் தேதி காலை அதிகார நந்தி கோபுர தரிசனம், இரவு 9:30 மணிக்கு தெருவடைச்சான் உற்சவம் நடக்கிறது. 29ம் தேதி இரவு வெள்ளி ரதத்தில் வீதியுலா, 30ம் தேதி இரவு திருக்கல்யாணம் பரிவேட்டை, 1ம் தேதி காலை 9:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. வரும் 2ம் தேதி காலை நடராஜர் தரிசனம் தீர்த்தவாரி, 4ம் தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது.