வானப்பட்டரை மாரியம்மன் கோவிலில் அக்னி நட்சத்திர பூர்த்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2015 12:05
திருச்சி: திருச்சி வானப்பட்டரை மாரியம்மன் கோவிலில், 38ம் ஆண்டு அக்னி நட்சத்திர பூர்த்தி விழா, நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை, சிந்தாமணி படித்துறையில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம், அக்னிசட்டி, அலகு காவடி எடுத்து கோவிலுக்கு வந்தனர். பின் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. மாலையில் அம்மன் வீதியுலா நடந்தது. இன்று, சப்பாணி கருப்புக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.