புதுச்சேரி: உழந்தைகீரப்பாளை யம் அனிதா நகரில் கருமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நாளை (26ம் தேதி) துவங்குகிறது. தொடர்ந்து, 27ம் தேதி இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 28ம் தேதி மாலை 6:20 மணிக்கு சிறப்பு ஆராதனை, 29ம் தேதி அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு 108 இளநீர் அபிஷேகம் நடக்கிறது. 31ம் தேதி நவசக்தி பூஜை, மூலமந்திர வேதமந்திர ஹோமம், பகல் 11:30 மணிக்கு, கலசாபிஷேகம், மாலை 6:30 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. 1ம் தேதி மஞ் சள் நீராட்டு விழா, 2ம் தேதி இரவு 7:00 மணிக்கு, பவுர்ணமி பூஜை, ஊஞ்ச உற்சவ நடக்கிறது.