Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரியக்குடி கோயில் வைகாசி விழா ... பிரளயநாதர் கோயிலில் அன்னைக்கு முதல் மரியாதை! பிரளயநாதர் கோயிலில் அன்னைக்கு முதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமுருகன்பூண்டியில் தீர்த்தக்குட ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
திருமுருகன்பூண்டியில் தீர்த்தக்குட ஊர்வலம்!

பதிவு செய்த நாள்

26 மே
2015
11:05

அவிநாசி : கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று நடந்த முளைப்பாரி, தீர்த்தக்குட ஊர்வலத்தால், திருமுருகன்பூண்டி நேற்று விழாக்கோலம் பூண்டது. திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், 29ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. நேற்று முளைப்பாரி, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. காவேரி, பிரம்மபுத்திரா, கங்கை, யமுனை, சரஸ்வதி, மானசரோவர் உள்ளிட்ட, 18 புண்ணிய நதிகளில் இருந்தும், பல்வேறு சிவாலயங்களில் இருந்தும் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, குடங்களில் நிரப்பப்பட்டு, ஊர்வலம் நடந்தது.அணைப்புதூரில் உள்ள கூப்பிடு விநாயகர் கோவிலில் இருந்து துவங்கிய ஊர்வலம், திருப்பூர் ரோடு வழியாக 2 கி.மீ., தூரம் சென்று, கோவிலில் நிறைவடைந்தது. நாதஸ்வர இசையுடன் யானை முன்னே அணிவகுக்க, தீபங்களை ஏந்திய பெண்கள் திருவாசகம் பாடி வார, பெண்கள் சிங்காரி மேளத்தை இசைக்க, கோலாட்டம், குதிரையாட்டத்துடன், 308 பெண்கள் தீர்த்தக்குடம், 308 முளைப்பாரி சுமந்த பெண்கள் மற்றும் 18 புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தக்குடங்களை சுமந்த சிவனடியார்கள் என, பலரும் பங்கேற்றனர். ஆலகால விஷத்தை அருந்தும் நீலகண்டன், சிவபெருமான் கைலாய காட்சியும், இடம் பெற்றிருந்தன.திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை, சேக்கிழார் புனிதர் பேரவை, ஸ்ரீசுந்தரர் வழிபாட்டுக்குழு, பிரதோஷ வழிபாட்டுக்குழு, ஸ்ரீருத்ராபிஷேக வழிபாட்டுக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், சிவனடி யார்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தீர்த்தக்குட ஊர்வலத்தால், நேற்று மாலை, 6:00 முதல் இரவு 7:00 மணி வரை, திருப்பூர் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருப்பூரை நோக்கி சென்ற வாகனங்கள், அணைப்புதூரை தாண்டி, 3 கி.மீ., தூரத்துக்கும்; அவிநாசி நோக்கி சென்ற வாகனங்கள், அம்மாபாளையம் வரையும் அணிவகுத்து நின்றிருந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar