பதிவு செய்த நாள்
27
மே
2015
11:05
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில், மகாசக்தி மாரியம்மன் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது. மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில் உள்ள, மகா சக்தி மாரியம்மன் கோவிலில், கடந்த, 12ம் தேதி பூச்சாட்டுடன் விழா துவங்கியது. 19ம் தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. 22ம் தேதி திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். நேற்று அம்மன் திருக்கல்யாணமும், அம்மன் அழைப்பும் நடந்தது.இன்று பால்குடமும், மாவிளக்கு எடுத்தலும், மாலையில் சக்தி விநாயகர் கோவிலிலிருந்து அலகு குத்தி வந்து, நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து, 28ம் தேதி மஞ்சள் நீராட்டும், 29ம் தேதி மறுபூஜையும் நடைபெற உள்ளது.