பதிவு செய்த நாள்
27
மே
2015
11:05
கருமத்தம்பட்டி : செல்லப்பம்பாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கருமத்தம்பட்டி அடுத்த செல்லப்பம்பாளையத்தில் விநாயகர், மாகாளியம்மன், கருப்பராயன் மற்றும் கன்னிமார் கோவில் பழமையானது. இங்கு, புதிதாக கருவறை, முன் மண்டபம், அர்த்த மண்டபம், விமானம் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன.கடந்த 22ம்தேதி மாலை, 5:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது. மாலை முதற்கால யாகம் மற்றும் பூர்ணாகுதி நடந்தது. மூன்றாம் கால வேள்வி முடிந்து, தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது.24ம் தேதி காலை, 5:30 மணிக்கு நான்காம் கால வேள்வி முடிவுற்று, புனிதநீர் கலசங்கள் கோவிலை வலம் வந்தன. 7:00 மணி முதல் 8:00 மணிக்குள் விமானங்கள் மற்றும் மூலவருக்கு, கவுமார மடாலய ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அருளாளர்களின் அருளுரைகள், காவடியாட்டம், கும்மியாட்டம், பரதநாட்டியம் மற்றும் சொற்பொழிவு நடந்தது.