பதிவு செய்த நாள்
28
மே
2015
10:05
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவிலில், வைகாசி அவதார திருவிழாவை முன்னிட்டு, இன்று காலை மங்களாசாசனமும், இரவில் கருட சேவை நிகழ்ச்சியும் நடக்கின்றன. ஆதிநாதர் கோவிலில், கடந்த 23ம் தேதி, கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இன்று காலை, நவ திருப்பதி கோவில்களில் உள்ள கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய் சினிவேந்தன், பெருங்குளம் மாயக்கூத்தன், தொலைவில்லிமங்கலம் செந்தாமரைக்கண்ணன், இரட்டை திருப்பதி தேவபிரான், தென்திருப்பேரை நகரில் முகில்வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநதி ஆகியோர், ஹம்ச வாகனத்திலும், மதுரகவியாழ்வார் தங்கபரங்கி நாற்காலியிலும், பூப்பந்தலிலும் எழுந்தருளுகின்றனர். சுவாமி நம்மாழ்வாரின் மங்களாசாசனம் நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு, ஆழ்வார் திருநகரி பொழிந்து நின்றபிரான் உள்ளிட்ட நவ திருப்பதி சுவாமிகள், கருட வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.