காரமடை அரங்கநாதர் கோயிலில் ஜூன் 7ல் நன்னீராட்டு பெருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2015 10:05
கோவை: கோவை மாவட்டத்தில் திவ்ய தேச க்ஷேத்திரம் இல்லையே என்ற குறையைப் போக்கும் வண்ணம் அதற்கு இணையான கோயிலாக விளங்கும் தலம் காரமடை அரங்கநாத சுவாமி கோயில். நான்கு யுகங்களைக் கண்டவர். இப்பெருமாள். கொங்கு நாட்டின் தலைமை வைணவத்தலம். பலபெருமைகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் கோயிலுக்கு அணி சேர்க்கும் இராஜகோபுரம் இல்லையே என்ற ஏக்கமும் குறையும் அனைத்து பக்தர்கள் நெஞ்சிலும் நிலைபெற்றிருந்தன. அரங்கனின் கருணையால் அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தும் விதமாக 11.12.2005 அன்று ஏழு நிலை ராஜகோபுரம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்டு கலை நுணுக்கத்துடன் கைதேர்ந்த சிற்பிகள் மூலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. அழகுற வர்ணங்கள் பூசிய நிலையில் எழிலுடன் ஓங்கி உயர்ந்து கம்பீரமாக காட்சி தரும் இராஜகோபுரத்திற்கு வரும் ஜூன் 2015 7ம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று காலை 9.15 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.