விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து 10:00 மணிக்கு சாகை வார்த்தல், கரகம் எடுத்தல் நடந்தது. மாலை 5:00 மணிக்கு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் சிற ப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.