பதிவு செய்த நாள்
28
மே
2015
10:05
சைதாப்பேட்டை: சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில், மகா கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் இன்று துவங்குகின்றன. சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில், ஜூன், 7ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அதை முன்னிட்டு, இன்று திருவாணை பெறல், விநாயகர் பிரார்த்தனை, கும்பாபிஷேக லக்ன பத்திரிகை வாசித்தல் நடைபெறும். வரும், 30ம் தேதி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அங்குரார்ப்பணம் ஆகியவை நடக்க உள்ளன. மறுநாள், 31ம் தேதி, காலை 8:00 மணிக்கு, அனைத்து புனிதநதிகளின் தீர்த்தங்கள் சேகரிக்கப்பட்டு, கங்கை பூஜை செய்து, அவை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்படும். ஜூன் 4ம் தேதி காலை, முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது. ஜூன் 7ம் தேதி, காலை ஆறாம் கால யாகசாலை பூஜை முடிந்து, காலை, 9:05 மணிக்கு, ராஜகோபுரம், விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.